மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. வாழைக்காய் வியாபாரி. இவரது மகன் துரை மகாராஜன் (12). ஆலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். மகாராஜன் காய்ச்சல் காரணமாக, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, ரத்த பரிசோதனை செய்ததில் டெங்கு இருப்பது உறுதியானது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு நேற்று முன்தினம் இரவு இறந்தார்.