விண்வெளி குப்பை அச்சுறுத்தலில் இருந்து செயற்கைக்கோள்களை பாதுகாக்க ரூ.33.கோடி: மத்திய அரசு முன்மொழிவு

புதுடெல்லி: இஸ்ரோ சார்பில் பல்வேறு செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்பட்டு வருகின்றன.  விண்வெளியில் இருந்து நாட்டுக்கு வரும் ஆபத்தை தடுக்கவும், இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்காகவும் ₹400 கோடி செலவில். ‘நெட்ரா’ என்ற திட்டத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பரில் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் மற்றும் பூமிக்கு விண்ணில் இருந்து வரக்கூடிய ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்ைக மேற்கொள்ள முடியும். இந்த திட்டத்துக்காக முதல் கட்டமாக மத்திய அரசு ₹33.3 கோடியை ஒதுக்கீடு செய்ய முன்மொழிந்துள்ளதாக துணை மானிய கோரிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Related Stories: