சென்னை: மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் ஷேர் ஆட்டோ சேவையை கிண்டி நிலையத்தில் மாதம் தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துவதாக மெட்ரோ ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக ₹5 கட்டணத்துடன் ஷேர் ஆட்டோ சேவையை அறிமுகப்படுத்தியது. தற்போது குறைந்தது மாதம் தோறும் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரையில் ஷேர் ஆட்டோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.