சென்னை: தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், காஞ்சிபுரத்தில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.