தருமபுரி: ஜோசியம் பார்த்து உள்ளாட்சி தேர்தல் தேதியை முடிவு செய்துள்ளார்கள் என்று தருமபுரி அரூரில் டிடிவி தினகரன் தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி யாரையாவது உயர்த்திப் பேசினால், அவர் பொய் சொல்கிறார் என்பது அர்த்தம் என்று அவர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால் அமமுக-வும் வழக்கு தொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.