மலைக்கோட்டை மாநகர கமிஷனர் ஆபீசிலேயே மோசடி

திருச்சி மலைக்கோட்டை மாநகர் கமிஷனர் அலுவலக அமைச்சு பணியாளர் அலுவலகத்தில் போலீசாருக்கு டி.ஏ பில் பிரிவில் மோசடி நடந்துள்ளது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பிரிவின் ஜூனியர் அசிஸ்டென்ட்,  அலுவலக பணி காரணமாக சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு சென்ற வகையில் செலவான தொகை எவ்வளவு என கணக்கு எழுதி உள்ளார். ஆனால், அவர் குறிப்பிட்டிருந்த நாட்களில் சென்னைக்கு செல்லவில்லை என சக  ஊழியர்களே குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் அந்த பிரிவின் எஸ்சிஓ அந்த ஜூனியர் அசிஸ்டென்ட் மீது நடவடிக்கை எடுக்காமல் பெயருக்கு 17(ஏ)வில் மெமோ கொடுத்துள்ளார். மோசடி செய்து இருந்த நிலையில் 17 (பி)  கொடுக்காமல் ஊழியரை காப்பாற்றுவதற்காக இந்த கண்துடைப்பு நடக்கிறது. மோசடி நடந்துள்ளதால் இதுகுறித்து முறையாக விசாரித்து கமிஷனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரசாக சக ஊழியர்களே குரல்  எழுப்பியுள்ளார்களாம்.

Related Stories: