சென்னை: சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி மற்றும் ஆதி திராவிடர் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. 400 மாணவிகள் உட்பட 800க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் யு-17 பிரிவில் வெங்கடேஷ், ஜீவா, சபா முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனர். அதுபோல், 1,500 மீட்டர் பெண்களுக்கான யு-17 ஓட்டப்பந்தயத்தில் அபிதா, கிரேசி, தேன்மொழி முதல் 3 இடங்களை வசப்படுத்தினர்.யு-19 மாணவர்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஷாம் குமார் தங்கப்பதக்கம் வென்றார். மகேந்திரன் வெள்ளி, உக்கிரபாண்டி வெண்கலம் வென்றனர். யு-19 மாணவி
களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தர்ஷா முதலிடத்தையும், பூமிகா 2வது இடத்தையும், ரமணி 3வது இடத்தையும் பிடித்தனர்.