சென்னை: தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தபபட்டுள்ளது. தமிழகத்தில் உணவு தானியங்களின் உற்பத்தி சுமார் 104.02 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலங்களை நெல் பயிற்களை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மழை கனமழை ெபய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் நடப்பட்டுள்ள நெல் பயிர்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பயிர்காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள வேளாண்மைத்துறை அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது மழை பெய்து வருவதால், வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கும், கள பணியாளர்களுக்கும் விவசாயிகளிடத்தில் சில விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி வயலில் தேங்கும் நீரை ஆழமான வாய்க்கால்கள் அமைத்து வடித்து விட வேண்டும். தண்ணீர் தேக்கத்தினால் பயிர் வளர்ச்சி குன்றி காணப்பட்டால் தண்ணீரை வடித்தவுடன் ஏக்கருக்கு யூரியா 22 கிலோவுடன், ஜிப்சம் 18 கிலோ மற்றும் வேப்பம் புண்ணாக்கு 4 கிலோவினை ஒருநாள் இரவு கலந்துவைத்து 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமிட வேண்டும்.