சென்னை: தெற்கு அந்தமானின் அபர்தீன் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக தேர்வு செய்யபட்டுள்ளது. தமிழக ஐபிஎஸ் அதிகாரியான மனோஜின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்நிலையத்துக்கு மத்திய அரசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.தெற்கு அந்தமான் மாவட்டத்தின் அபர்தீன் காவல் நிலையத்தை நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த டிஜிபிக்கள் ஆலோசனை கூட்டத்தில் அந்த காவல்நிலையத்தின் எஸ்பி மனோஜ், இன்ஸ்பெக்டர் சஞ்சய்குமாரை பாராட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோப்பையை வழங்கினார். போலீஸ் டிஜிபி தீபேந்தர பதக்கின் தொடர் பணிகள், எஸ்பி மனோஜின் அர்ப்பணிப்பு மூலம் இந்த சாதனை சாத்தியமானது என்று அந்தமான் போலீசார் தெரிவித்துள்ளனர்.தெற்கு அந்தமானின் அபர்தீன் காவல்நிலையம் மிகவும் பரபரப்பான காவல் நிலையங்களில் ஒன்று. அப்பகுதியில் நிலவிய பல்வேறு பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வந்ததில் இந்த காவல்நிலையத்தின் பங்கு மகத்தானது.
விருது கிடைத்தது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:தெற்கு அந்தமான் எஸ்பி மனோஜின் ஒட்டுமொத்த கண்காணிப்பால் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.