தமிழகத்தில் 1,100 கோடி செலவில் புதிதாக 4 மருத்துவக்கல்லூரிகள்: மத்திய அரசு ஒப்புதல் கேட்டு அறிக்கை தாக்கல்

சென்னை: தமிழகத்தில் 1100 கோடி செலவில் புதிதாக  4 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் ெதரிவித்தார். நாடு முழுவதும் வரும் 2020-2021ம் நிதியாண்டில் 75 புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில்,  தமிழக அரசு சார்பில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 2173 கோடி செலவில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு நிதி  ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் 600 கோடியும், மத்திய அரசு சார்பில் 137 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர்  விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலும், 1080 கோடி செலவில் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, மற்றும் நாகை மாவட்டங்களில் ஆகிய 3 மருத்துவகல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது  இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் இப்பணிகளுக்கு டெண்டர் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதிதாக அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், காஞ்சிபுரத்தில் மருத்துவகல்லூரி உடன் கூடிய மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளுக்கு தலா 150 சீட்டுகள் வீதம் 450  சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கல்லூரிகளுக்கான இடம் தேர்வு செய்யும் பணியில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர். அதன்படி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரில் வளாகத்தில்  26.5 ஏக்கரில் 347 கோடி செலவில் மருத்துவக்கலூரி மற்றும் மருத்துவமனை, கடலூர் மாவட்டம் அரிசிபெரியாங்குப்பத்தில் 23 ஏக்கரில் 372 கோடி செலவில் மருத்துவ கல்லூரி உடன் கூடிய மருத்துவமனை, கள்ளக்குறிச்சி கடத்தூரில் 24  ஏக்கரில் 381 கோடியில் கோடியில் மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை, காஞ்சிபுரம் காரை கிராமத்தில் 31 ஏக்கரில் ₹385 கோடியில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்குமாறு மருத்துவகல்வி இயக்குனர் நாராயணபாபு தமிழக பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகனுக்கு கடிதம் ஒன்றை எழுதி  அனுப்பினார். அதன்பேரில், பொதுப்பணித்துறை சார்பில் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசிடம் சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த  அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த கட்டமாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: