வருசநாடு: மயிலாடும்பாறை பகுதியில் மூல வைகையாற்றின் கரையில் புதிய தடுப்புச் சுவரை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு உள்ளது. மூல வைகையாற்றில் சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் கரைபுரண்டோடியபோது, இப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் உள்ள தடுப்பு சுவர் 200 மீட்டர் தூரத்துக்கு இடிந்து விழுந்தது. இதில் ஆற்றின் கரை அரிக்கப்பட்டு, காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.