சென்னை: திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவதாக கூறி கோவையில் தனியார் விடுதியை மூடிய உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.