வத்திராயிருப்பு: சதுரகிரி கோயிலுக்குச் செல்லும் வழியில் மாற்றுப்பாதை அமைக்காமல், பாலப் பணி நடந்து வருவதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை விலக்கு மற்றும் லிங்கம் கோயில் வழியாக வண்டிப்பண்ணைக்கு சென்று, அங்கிருந்து சதுரகோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய சென்று வந்தனர். இந்நிலையில், லிங்கம் கோயில் அருகில் இருந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு பெரியபாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.