*வாகன ஓட்டிகள் அச்சம்
குன்னூர் : குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 5 காட்டு யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரியில் யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையோரங்களுக்கு வருகின்றன. தற்போது குன்னூர் பகுதிகளில் பெய்த கன மழையால் அனைத்து இடங்களும் பச்சை பசேல் என்று செழித்து காணப்படுகிறது. இவற்றை உண்பதற்கு தற்போது யானை கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது.
குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் அதிகளவில் புதர்கள் நிறைந்து காணப்படுவதால் 5 யானைகள் சாலையில் முகாமிட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.யானைகளை புகைப்படங்கள் எடுக்கவோ அவற்றை கூச்சலிட்டு துன்புறுத்தவோ கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.