கேரளா: நாட்டை வழி நடத்துபவர் வன்முறையை நம்புவதால் பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதற்கான காரணம் குறித்து கேரளாவில் பேசிய ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினர், தலித்துகள் மீது வெறுப்பு உணர்வு பரப்பப்படுவதாக ராகுல் காந்தி கூறினார்.