கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை : அமைச்சர் தங்கமணி

புதுக்கோட்டை: உடல்தகுதி, எழுத்துத்தேர்வு அடிப்படையில் கேங்மேன் தேர்வு நடைபெறுவதாக புதுக்கோட்டையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும், வேலைக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: