கும்பகோணம்: கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. கீழகொட்டையூர் என்ற இடத்தில் கிராம நிர்வாக அலுவலகத்துக்குள் நுழந்த மர்ம நபர்கள் ஆவணங்களை எரித்துச் சென்றனர். நாகக்குடி கிராம தொடர்பான ஆவணங்கள் எரிந்து நாசமானதாக போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.