பெரம்பூர்: சென்னை திரு.வி.க நகர் கிருஷ்ணா நகர் 3வது தெருவை சேர்ந்தவர் உபயதுல்லா (39). இவர், பாரிமுனையில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு, கடந்த 12 வருடங்களுக்கு முன், நஸ்ரின் என்பவருடன் திருமணமானது. தம்பதிக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக, அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி காலை இவர்களின் குழந்தைகள் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரடைந்த நஸ்ரின் அடுப்பில் சூடாக கொதித்துக் கொண்டு இருந்த எண்ணெயை எடுத்து உபயதுல்லா மீது ஊற்றியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, உடல் முழுவதும் வெந்த நிலையில் உபயதுல்லா துடிதுடித்து கொண்டிருந்தார்.