×

நெல் குவிண்டாலுக்கு 2,500 கோரி தலைமை செயலகத்தை 17ல் விவசாயிகள் முற்றுகை

தஞ்சை: தஞ்சையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி டெல்டாவில் பெய்து வரும் பருவமழையால் சம்பா பயிரில் ஆணைக்கொம்பன் பூச்சிதாக்குதலால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதை கட்டுப்படுத்தவும், எதிர்காலத்தில் இப்பூச்சி தாக்குதலை ஒழிக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தை பின்பற்றி, நெல்குவிண்டாலுக்கு 2,500யை  தமிழக அரசு வழங்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் சம்பா நெல்கொள்முதல் துவங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 17ம் தேதி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Paddy Quintal, Farmers, Siege
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...