பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமம் ஏ.டி. காலனியில் ஜவுளிக்கடை அதிபருக்கு ெசாந்தமான காம்பவுண்ட் சுவர் கடந்த 2ம்தேதி இடிந்து, அருகில் உள்ள 3 வீடுகள் மீது விழுந்து அமுக்கியது. இதில்17 பேர் பலியாகினர். இச்சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலையை உருவாக்கியது. உயிர்ப்பலிக்கு காரணமான காம்பவுண்ட் சுவரின் மிச்சம் மீதி பகுதியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட கருங்கல் காம்பவுண்ட் சுவர் முற்றிலும் இடிக்கப்பட்டது. இதேபோல், இதன் அருகிலேயே சுமார் 200 அடி நீளம், 20 அடி உயரம் கொண்ட இன்னொரு கருங்கல் காம்பவுண்ட் சுவர் உள்ளது.