×

சட்டப் பல்கலையில் பட்டம் பெற 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழா 2020 பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடக்கிறது. சட்டப் பல்கலைக் கழகத்தில் மே 2019ம் வரை படித்து பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படித்தவர்கள் மேற்கண்ட பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை டிசம்பர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணைப்பு பெற்ற சட்டக் கல்லூரியில் படித்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரிகள் மூலம் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். சீர்மிகு சட்டப் பள்ளியில் படித்த தகுதியான மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறை இயக்குநர் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை பல்கலைக் கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Tags : Apply for a degree ,n law, you must apply within 31 years
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...