புதுடெல்லி: ‘`வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம், அடுத்த மாதம் 20ம் தேதி இந்தியா வருகிறது,’’ என மாநிலங்களவையில் உணவுத் துறை இணையமைச்சர் தான்வே அறிவித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து மத்திய உணவுத்துறை இணையமைச்சர் தான்வே ராவ் சாேகப் தடராவ் பேசியதாவது; வெங்காயம் பயிர்கள் சேதமடைய, தாமதமாகவும் தொடர்ந்து பெய்த மழையுமே காரணம். இதனால், அரசு இருப்பு வைத்துள்ளதில் இருந்து வெங்காயம் தற்போது விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், அரசு வர்த்தக நிறுவனமான எம்எம்டிசி தற்போது பல்வேறு நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் கப்பலில் ஜனவரி 20ம் தேதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உணவுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் வித்து உற்பத்தியை தீவிரப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டின் 60 சதவீத உணவு எண்ணெய் தேவை இறக்குமதி மூலமும், 40 சதவீதம் உள்நாட்டு உற்பத்தி மூலமும் நிறைவேற்றப்படுகிறது.