உத்தர பிரதேசத்தில் பிரியங்கா பயணம்

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேசத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று வருகை தந்தார். பின்னர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். வரும் 2022ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்காக காங்கிரஸ் கட்சி, அஜய் குமார் லாலு தலைமையில் நிர்வாகிகளை நியமித்துள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு பிரியங்கா உத்தரபிரதேசத்துக்கு வருவது இதுவே முதல்முறை. 2 நாள் பயணத்தின்போது வரும் 14ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள பொருளாதார வீழ்ச்சியை கண்டித்து நடைபெறும் பேரணி, இதர பிரச்னை தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: