சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் பகலில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த புலிகள் காப்பக வனப்பகுதியில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்- கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இச்சாலையை, யானைகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் நடமாடுகிறது.