தேனி: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆண்டிபட்டி அருகே புதூர் பகுதியில் வாய்க்கால் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகியது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரை கொண்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டது. இக்கால்வாயில் கடந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியை தாண்டியுள்ளதால் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து போராட்டங்கள் நடத்தினர்.