பேரையூர்: பேரையூர் பகுதியில் தொடர் மழையால் சோளம் விளைச்சால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், பேரையூர், டி.கல்லுப்பட்டி, பெரியபூலாம்பட்டி மற்றும் மத்தக்கரை பகுதிகளில் விவசாயிகள் பருவமழையை நம்பி மானாவாரி நிலங்களில் கோவில்பட்டிநெட்டை வெள்ளைச்சோளத்தை அதிகளவில் விதைப்பு செய்தனர். கதிர் விட்டு சோளம் அறுவடை பருவத்திற்கு வந்தபோது புழு தாக்கியது. மேலும் இப்பகுதியில் பெய்தும் வரும் தொடர் சாரல் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை சோளம் நிறம் மாறி கருப்பு நிறத்தில் உள்ளது.