திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீப திருவிழாவிற்கு துணிப்பை, சணல் பை கொண்டு வருபவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த தூக்கு பைகளை கொண்டு வரும் மக்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் 12 பேருக்கு தலா 2 கிராம் தங்க நாணயம், 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும். சுற்றுச்சூழலை பாதுகாக்க, மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. விழா காலங்களில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கவும், துணி, சணல் பைகளை மக்களிடம் ஊக்குவிக்கவும் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: