சென்னை: சென்னை மெரினா கடலில் நுரை ஏற்பட்டது குறித்து ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு அறிக்கை தர ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெரினா கடல் நுரையாக காட்சியளித்ததால் பரபரப்பு நிலவியது.