சென்னை: பொன். மாணிக்கவேலுக்கு பதவி நீட்டிப்பு தருவது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சிலைகடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்டது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.