குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், சிவகங்கை, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமேஸ்வரத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது.

Related Stories: