×

2008ல் ஆசிட் வீச்சு குற்றவாளிகள்..இன்று பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள்: என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய சைபராபாத் ஆணையர்!

சைபராத்: ஐதராபாத் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்துள்ள சைபராபாத் ஆணையருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கடந்த 28ம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் முகமது பாஷா, சின்னகேசவலு, கிளீனர்கள் சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்காக பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிச்செல்ல முயன்றதால் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்கவுண்டரின் போது மூன்று காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தெலங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்த நிலையில் அங்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நால்வரும் சுட்டுக்கொல்லப்பட்டதற்காக சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த 2008ம் ஆண்டு வாரங்கல் பகுதியில் பொறியியல் மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீசிய 3 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். அப்போது வாரங்கல் எஸ்.பியாக இருந்தவர் வி.சி.சஜ்ஜனார். இரண்டு மாணவிகள் முகத்தில் ஆசிட் வீசி அவர்கள் வாழ்வை சிதைத்த மூன்று பேரையும் என்கவுண்டர் செய்த விவகாரத்தில் அப்போதே சஜ்ஜனாருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில், தற்போது சைபராபாத் ஆணையராக பதவி வகித்து வரும் அதே வி.சி சஜ்ஜனார் தான், பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்தியுள்ளர். அவருடைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது. எனவே சஜ்ஜனாருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவரை போலீஸ் வட்டாரத்தில் என்கவுண்டர் போலீஸ் என அழைப்பதாகவும் கூறப்படுகிறது.



Tags : delivery ,Encounter Specialist ,VC Sajjanar , Telangana, Female Veterinary, Criminal, Encounter, Cyberabad, Commissioner,V C Sajjanar
× RELATED புனேவில் ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்