சென்னை: சென்னை வேளச்சேரி வெங்கடேஷ் வராநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுபாஷினி (42). மாம்பலம் ரயில்நிலைய கிளார்க். நேற்று காலை தனது கணவருடன் பைக்கில் வந்தவர் கிண்டி ரயில் நிலையம் அருகே இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மற்றும் முகமூடி அணிந்திருந்த ஒரு பெண்ணும் உங்களை இன்ஸ்பெக்டர் அழைத்து வர சொன்னார், வாருங்கள் என்று வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். உடனே சுபாஷினி தனது கணவருக்கு போன் செய்யமுயன்ற போது போனை தட்டிவிட்டுள்ளனர். சுதாகரித்து கொண்ட சுபாஷினி ஒடிச்சென்று ரயில்வே அலுவலகத்தில் நுழைந்தபோது அந்த 2 பேரும் சுபாஷினியை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல முயன்றனர். இந்த காட்சிகளை பார்த்த பொதுமக்களும் ரயில்வே போலீசாரும் ஒடிவருவதை பார்த்த முகமூடி அணிந்த பெண் ஓடி விட்டார். ஆனால் அவருடன் வந்த ஆண் நபர் போலீசாரிடம் சிக்கி கொண்டார்அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘தன் பெயர் ஜீவானந்தம் என்றும் சொந்தமாக கார் ஒட்டிவருவதாகவும் தெரிவித்தார்.