சென்னை: துப்பாக்கி முனையில் தொழில் அதிபரை மிரட்டிய பட விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர். தி.நகர் கோபால கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹேமநாத்(30), இன்டிரீயர் டெக்கரேட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி அண்ணா மேம்பாலாம் அருகே உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில தனது நணபர்களுக்குடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போரு அவருக்கு எதிராக 5 பேர் அமர்ந்து மது குடித்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவு 1 மணி அளவில் எதிரே அமர்ந்து இருந்த திரைப்பட விநியோகஸ்தரான நெசப்பாகம் பிரவீன், அவரது நண்பர் திருவான்மியூரைச் சேர்ந்த சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர் தாங்கள் குடித்த மதுவுக்கு ஹேமநாத்தை ‘பில்’ கட்டும்படி மிரட்டியுள்ளனர். அதற்கு ஹேமநாத், ‘நீங்கள் குடித்ததற்கு நான் ஏன் பணம் கட்ட வேண்டும்’ என்று கேட்டதால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.