சேந்தமங்கலம்: கொல்லிமலை அருகே, முட்புதரில் கேட்பாரற்று கிடந்த 35 கள்ளத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் சிலர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்துக்கொண்டு, வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக, மாவட்ட எஸ்பி அருளரசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், கொல்லிமலையில் அதிகளவில் உரிமம் இல்லாத கள்ள துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ளத்துப்பாக்கி வைத்திருயிருப்பவர்கள், தாமாக முன் வந்து காவல்நிலையத்தில் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. மேலும் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.