கரூர்: ரசாயனம் கலந்த கொசுவலை தயாரித்த நிறுவனத்தின் உற்பத்தியை நிறுத்த வேளாண்மைதுறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ‘ஷோபிகா இம்பெக்ஸ்’ என்ற கொசுவலை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலைகளில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் இங்கு தயாரிக்கப்படும் கொசுவலை பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில், கரூரில் ரசாயன கொசுவலை உற்பத்தியை நிறுத்த இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேளாண்மைத்துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் ரசாயன கொசுவலையை தடையை மீறி உற்பத்தி செய்வதாக புகார் எழுந்தது.