×

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் மாணவியின் தாய்க்குகாவல் நீட்டிப்பு

தேனி: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மாணவி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரது தாய் மைனாவதியின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரது காவலை டிச.19 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


Tags : Student , NEET CHANGE EXPERIENCE, STUDENT, MOTHER EXTENSION TO MOTHER
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...