வால்பாறை அருகே பஸ்சை நோக்கி ஓடிவந்த காட்டு யானை: பயணிகள் அச்சம்

வால்பாறை: வால்பாறை  அருகே பெரியகள்ளார் எஸ்டேட்டில் இருந்து வால்பாறைக்கு சென்ற பஸ்சின் முன்பு ஒற்றை யானை திடீரென ஓடிவந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அருகே பெரியகள்ளார்  எஸ்டேட்டில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் வால்பாறை நோக்கி  அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்  மற்றும் தொழிலாளர்கள் இருந்தனர். பஸ் அங்குள்ள வனப்பகுதி வழியாக  வந்தபோது எதிரே காட்டு யானை கூட்டம் வந்தது. பஸ்சை கண்ட யானைகள்  விலகி சென்றன. அதிலிருந்த ஒரு யானை மட்டும் பஸ்சை நோக்கி வேகமாக ஓடி  வந்தது. இதனால் பீதியடைந்த மாணவ, மாணவிகள் அலறினர். சுதாரித்துக்கொண்ட டிரைவர் தொடர்ந்து ஹாரன் ஒலி எழுப்பினார். சத்தம் கேட்டதும் யானை சாலையில் இருந்து விலகி சென்றது. இதனால் பயணிகள்  நிம்மதியடைந்தனர். பின்னர் பஸ் வால்பாறைக்கு பத்திரமாக வந்து  சேர்ந்தது.

Related Stories: