சென்னை: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஏரி பின்புறம், லட்சுமிபுரம் கங்கை அம்மன் கோயில் அருகில் சுமார் 50 சென்ட் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டும் பணி கடந்த ஒரு வாரமாக அவசர அவசரமாக நடந்தது. 3 பக்க சுற்றுச்சுவர் பணிகள் முடிந்த நிலையில் ஏரி பின்புறம் கட்டுமானப் பணியில் நேற்று 7 ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் சுமார் 70 அடி நீளம் கொண்ட 10 அடி உயரம் உள்ள சுற்றுச்சுவர் திடீரென சரிந்து விழுந்தது. கட்டிட தொழிலாளர்கள் பொத்தூரை சேர்ந்த லோகநாதன் (50), எல்லம்மன்பேட்டையைச் சேர்ந்த பாபு (45), பொத்தூர் வள்ளிவேலன் நகரைச் சேர்ந்த லலிதா (50), செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் தெருவைச் சார்ந்த முத்து (40), அதே பொத்தூர் வள்ளி வேலன் நகரை சேர்ந்தவர்கள் செல்லப்பன் (47), தேவராஜ் (65), குமார் (45) உள்ளிட்ட 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.