சென்னை: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்ட 15 இடங்களுக்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பிய கேள்வி: காவிரி வடிநிலப் படுகையில் ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவதற்கு திட்டம் வகுத்து இருக்கிறது. அதற்காக, மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. அந்த கிணறுகளை தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா, அவ்வாறு தோண்டுகிற இடம், விளை நிலங்களா, அவ்வாறு இருந்தால் அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன, ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா, திட்டம் கைவிடப்படுமா?