×

பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு 9ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்த விவகாரத்தில் போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: மேட்டுப்பாளையம் விபத்து தொடர்பாக நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தமிழ்புலிகள் கட்சியை சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதற்கு எதிராக ஜனநாயக ரீதியாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரும் 9ம் தேதி சென்னையில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 


Tags : Periyar Sensors Association ,protest , Federation of Periyar sensors, protest
× RELATED 6 வழிச்சாலை பணிக்கு எதிர்ப்பு...