×

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 7 பேரிடம் என்ஐஏ போலீசார் 5 நாட்கள் விசாரிக்க அனுமதி: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தை போல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில், நாகப்பட்டினத்தை சேர்ந்த 2 பேரை அப்போது கைது செய்தனர். இவர்கள் தடைசெய்யப்பட்ட “அன்சாருல்லா” என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற நடவடிக்கைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ேலும், தங்களை போல் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் இருந்து டெல்லிக்கு நாடு கடத்தப்பட்ட 14 பேர் தங்கி இருப்பதாக கொடுத்த தகவலையடுத்து அவர்களையும் என்.ஐ.ஏ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் மேற்கொண்டு விசாரணையை துரிதப்படுத்துவதற்காக என்.ஐ.ஏ. போலீசார் அசன் அலி, தவுபிக் அகமது, முகமது இப்ராகிம், முகமது அப்சர், ரபிக் அகமது, முன்தாசிர் சபருல்லா கான், பாருக் ஆகிய 7 பேரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டிருந்தனர். மனுவை விசாரித்த தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டி, ஏழு பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து வரும் 9ம் தேதி மதியம் 1 மணிக்கு மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.


Tags : NIA , NIA Police, Poonthamalli Special Court
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை