சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் போதைப் பொருள் கடத்தலை அடுத்த 2 வாரத்தில் ஒழிப்பதாக கூறி காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சி அமைத்து 2 ஆண்டு ஆகியும் போதை பொருள் ஒழிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக அமைச்சர்கள் இருவர் போதை பொருள் ஒழிப்பு குறித்து வேடிக்கையாக பேசிக் கொண்டிருந்தனர்.