மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 14,000 கோடி மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடியை தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்தது. மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பை கிளை ஒன்றின் மூலம் வெளிநாட்டில் உள்ள பலருக்கு சட்டவிரோதமாக 14,000 கோடி பரிமாற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவர் இங்கிலாந்தில் இருப்பதை அறிந்த மத்திய அரசு அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்டார்.