திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் மல்லவாடி அருகே நடந்த விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளனர். மல்லவாடி டோல்கேட் அருகே இருசக்கர வாகனததில் சென்றுகொண்டிருந்த தம்பதி மீது பின்னால் வந்த லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது. சாலை விபத்தில் முரளி, இன்பமணி ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.