சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளதாக மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். டெல்லியில் பிரதமரை சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மகளுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று பிரதமரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தனது மகள் மரணத்திற்கு காரணமானவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். சிபிஐ விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் கூறியுள்ளதாக தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து முறையிட்டதாக பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார். சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவிலை என புகார் தெரிவித்தார். தனது மகள் தொடர்பான ஆதாரங்களை கோட்டூர்புரம் போலீஸ் மறைந்துவிட்டதாக அப்துல் லத்தீப் புகார் தெரிவித்துள்ளார்.