சுரண்டை: சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரையில் தெருவில் தேங்கி நின்ற சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர். சாம்பவர்வடகரையில் உள்ள தெருக்கள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளித்தது. தெருக்களை சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை காரணமாக தெரு முழுவதும் மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து சகதிக்காடாக காட்சியளித்தது.