பெரியகுளம் அருகே 64 நாட்களாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை: விவசாயிகள் மகிழ்ச்சி

பெரியகுளம்: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் 64 நாட்களாக தொடர்ந்து பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 கி.மீ.தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். கொடைக்கானல் மற்றும் பெரியகுளம் மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் பெய்யும் மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து இருக்கும்.தற்போது கடந்த சில நாட்களாக மழையின்றி சோத்துப்பாறை அணை நீர்வரத்து இன்றி வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வரத் துவங்கியது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 126 அடியும் நிரம்பி வழிகிறது. அணைக்கு வரும் நீர்வரத்து 208 கன அடியாகவும், நீர் இருப்பு 126.28அடியாகவும் அணையின் நீர் இருப்பு 100.66 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.தற்போது அணைக்கு வரும் 208 கன அடி தண்ணீரும் அப்படியே வெளியேறுகிறது. இது தவிர அணையிலிருந்து குடிநீருக்காக 3 கனஅடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணையிலிருந்து நீர் நிரம்பி வழிவதால் தாமரைக்குளம், பாப்பையன்பட்டி, பெரியகுளம் கண்மாய்கள் நிரம்பி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: