நெல்லை: நெல்லை பிரதான சாலையில் மீண்டும் மர்ம நபர்கள் மருத்துவ கழிவு உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை வீசிச்சென்றுள்ளனர். நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பகுதியில் பிரதான சாலைகளில் மருத்துவக் கழிவுகளை மூட்டை கட்டி வீசுவதும் அபாயகரமான கழிவு குப்பைகளை சாலை ஓரம் நள்ளிரவில் வாகனங்களில் வந்து வீசிச் செல்வதும் அடிக்கடி நடக்கிறது.