நெல்லையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் வீச்சு

நெல்லை: நெல்லை பிரதான சாலையில் மீண்டும் மர்ம நபர்கள் மருத்துவ கழிவு உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை வீசிச்சென்றுள்ளனர். நெல்லை மாநகர் மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்ட பகுதியில் பிரதான சாலைகளில் மருத்துவக் கழிவுகளை மூட்டை கட்டி வீசுவதும் அபாயகரமான கழிவு குப்பைகளை சாலை ஓரம் நள்ளிரவில் வாகனங்களில் வந்து வீசிச் செல்வதும் அடிக்கடி நடக்கிறது.

நெல்லை டக்கரம்மாள்புரம் பகுதியில் நேற்று அதிகாலை மர்மநபர்கள் ஏராளமான கழிவுகளை சாலைஓரம் ெகாட்டி சென்றுள்ளனர். இதில் மருத்துவ கழிவுகளும் பிற கழிவுகளும் உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மருத்துவ கழிவுகளை வீசிச்செல்லும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: