நெல்லை: நெல்லையில் பெய்த தொடர்மழையால் 4 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர்.
நெல்லை அருகே கரையிருப்பு ஆர்எஸ்ஏ நகரில் பார்வதி(65), கணபதி(63), பண்டாரம்(70), ஜெகநாதன்(58) ஆகியோர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். நெல்லையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழையால் வீடுகள் வலுவிழந்து சேதமடைந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி, வீட்டில் வசித்தவர்கள் அருகிலுள்ள மகன், மகள் உள்ளிட்ட உறவினர்கள் வீடுகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் உடமைகளையும் எடுத்து சென்றுவிட்டனர்.