சென்னை: டிடிவி தினகரன் கட்சியை பதிவு செய்ய தடைகோரி புகழேந்தி தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அமமுகவில் இருந்து வெளியேறிய பின் கட்சியைப் பற்றி புகழேந்தி கவலைப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியது.